<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>வேல்ஸில் இருந்து அருஷ்</title>
	<atom:link href="http://arushpages.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://arushpages.wordpress.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 17 Nov 2010 10:19:36 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='arushpages.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>வேல்ஸில் இருந்து அருஷ்</title>
		<link>http://arushpages.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://arushpages.wordpress.com/osd.xml" title="வேல்ஸில் இருந்து அருஷ்" />
	<atom:link rel='hub' href='http://arushpages.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>சிறீலங்காவின் கழுத்தை இறுக்க ஆரம்பித்துள்ள அனைத்துலக சட்டங்கள்!</title>
		<link>http://arushpages.wordpress.com/2010/11/17/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1/</link>
		<comments>http://arushpages.wordpress.com/2010/11/17/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Wed, 17 Nov 2010 10:19:36 +0000</pubDate>
		<dc:creator>eelanaadu</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arushpages.wordpress.com/?p=27</guid>
		<description><![CDATA[சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் பிரித்தானியா பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. மகிந்தாவின் இந்த பயணம் கைவிடப்பட்டதன் பின்னனியில் பிரித்தானியாவில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சமே பிரதானமாக உள்ளபோதும், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அதனை இருட்டடிப்புச் செய்துள்ளது. மகிந்தா ராஜபக்சாவின் பயணம் எதிர்வரும் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சா கைது &#8230; <a href="http://arushpages.wordpress.com/2010/11/17/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=27&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://arushpages.files.wordpress.com/2010/11/mahinda.jpg"><img class="alignleft size-medium wp-image-28" title="mahinda" src="http://arushpages.files.wordpress.com/2010/11/mahinda.jpg?w=300&#038;h=195" alt="" width="300" height="195" /></a> சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் பிரித்தானியா பயணம்  இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. மகிந்தாவின் இந்த பயணம் கைவிடப்பட்டதன்  பின்னனியில் பிரித்தானியாவில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சமே  பிரதானமாக உள்ளபோதும், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அதனை இருட்டடிப்புச்  செய்துள்ளது.</p>
<p><span id="more-27"></span>மகிந்தா ராஜபக்சாவின் பயணம் எதிர்வரும் மாதம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சா கைது  செய்யப்படுவதற்கான காரணங்கள் அதிகம் காணப்பட்டதால் தான் பயணம்  கைவிடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>பிரித்தானியாவின்  சட்டத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்கள்  மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய  முடியும். அதற்கான கைது உத்தரவை ஒரு தனிநபரோ அல்லது மனித உரிமை அமைப்போ  அல்லது பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு அமைப்போ மாவட்ட நீதிமன்றம்  ஒன்றில் பெற்றுவிட முடியும்.</p>
<p>எனிவே மகிந்தாவின் பயணம் தொடர்பில்  அறிந்துகொண்ட புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கைதுக்கான அனுமதி  உத்தரவை பெற்றுவிடுவார்கள் எற்ற அச்சமே மகிந்தாவின் வரவை தடுத்துள்ளது.</p>
<p>பிரித்தானியாவின்  அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2005 ஆம்  ஆண்டு இஸ்ரேலின் இராணுவ ஜெனரல் டொரன் அல்மொக்  என்பவர் பிரித்தானியாவுக்கு  பயணம் மேற்கொண்டபோது, அவரை கைது செய்வதற்கு பித்தானியா காவல்துறையினர்  ஹீத்துறூ விமான நிலையத்தில் காத்திருந்தனர்.</p>
<p>விமானம் தரையிறங்கிய  பின்னரே கள நிலைமைய அறிந்துகொண்ட டொரன் விமானத்தில் இருந்து  தரையிறங்கவில்லை, அந்த விமானத்திலேயே திரும்பிவிட்டாhர். இந்த  நடவடிக்கைக்கான கைது உத்தரவுகளை பலஸ்தீன செயற்பாட்டாளர்கள்  மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>அதன் பின்னர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்   இஸ்ரேலின் முன்னாள் ஜெனரலும், சேவையில் உள்ள அமைச்சருமான மொசே ஜலோன்  என்பவர் தான் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் பிரித்தானியாவுக்கான  பயணத்தை கைவிட்ருந்தார். காசா பகுதியில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற வான்  தாக்குதல்களின் பின்னனியில் அவர் இருந்தாக தெரிவிக்கப்பட்டு கைது உத்தரவு  பெறப்பட்டிருந்தது.</p>
<p>கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு  பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஈகூட்  பாரக் என்வரை கைது செய்வதற்கு வழக்கறிஞர்கள் முயன்றபோதும், அது  வெற்றிபெறவில்லை. இராஜதந்திர அந்தஸ்த்தை அவர் கொண்டிருந்தார் என  தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>எனினும் அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்  பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்த இஸ்ரேலின் முன்னாள்  வெளிவிவகார அமைச்சர் ரிஸ்பி லிவ்னி என்பவரை கைது செய்வதற்கு பலஸ்தீன  வழக்கறிஞர்கள் முயன்றிருந்தனர். காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>எனினும்  இந்த தாக்குதல் நடைபெற்ற காலப்பகுதியில் அவர் நாட்டில் இருக்கவில்லை  என்பதை தெளிவுபடுத்திய பிரித்தானியா அதிகாரிகள் நீதிமன்றம் வழங்கிய கைது  உத்தரவை மீளப்பெற்றிருந்தனர்.</p>
<p>இந்த சம்பவங்களினால் இஸ்ரேலுடன்  இராஜதந்திர விரிசல்களை எதிர்கொண்ட பிரித்தானியா அரசு தனது சட்ட முறைகளில்  சில திருத்தங்களை கொண்டுவர முயன்றிருந்தது. அதாவது வெளிநாட்டு அதிகாரிகளை  கைது செய்வதற்கான கைது உத்தரவுகளை பெறும்போது அது நீதி ஆணையாளர் நயகத்தின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், அதனை அவர் அங்கீகரிக்க வேண்டும்  எனவும் புதிய திருத்தத்தை பிரித்தானியா அரசு முன்மொழிந்திருந்தது. எனினும்  அது இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.</p>
<p>அதன் பின்னர் கடந்த ஜனவரி  மாதம் (2010) பிரித்தானியா இராணுவத்தினருடன் கூட்டு பயிற்சிகளை  மேற்கொள்ளும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு வருகைதர திட்டமிட்டிருந்த  இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவினர் தாம் கைது செய்யப்படலாம் என்ற  அச்சத்தில் தமது பயணத்தை இறுதி நேரத்தில் கைவிட்டிருந்தனர்.</p>
<p>இராணுவத்தில்  மேஜர் தொடக்கம் கேணல் தர பதவிகளை கொண்ட இந்த இராணுவக்குழுவினரை  பிரித்தானியா இராணுவமே அழைத்திருந்தது. எனினும் தமது படை அதிகாரிகள்  பிரித்தானியாவில் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை  பிரித்தானியா அரசு தரமுடியுமா என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>ஆனால்  அதற்கான உத்தரவாதங்களை தரமுடியாது எனவும், தமது சட்டங்களை தாம்  மீறமுடியாது என்றும் பிரித்தானியா தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேல் படை  அதிகாரிகள் தமது பயணத்தை முற்றாக கைவிட்டிருந்தனர்.</p>
<p>நாட்டைச்சேர்ந்த  சர்வாதிகாரி ஒகஸ்ரோர் பினோசற் என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு  பிரித்தானியாவுக்கு வருகைதந்தபோது கைது செய்யப்பட்டிருந்தார். ஆட்சியில்  இருந்தபோது நீதிக்குப்புறம்பான படுகொலைகள், வன்முறைகள், மனித உரிமை  மீறல்கள் போன்றவற்றில் அவர் ஈடுபட்டிருந்தார் என தெரிவித்தே ஸ்கொட்லான்யாட்  காவல்த்துறையினர் அவரை கைதுசெய்திருந்தனர்.</p>
<p>அதாவது இந்த அனைத்துலக  சட்டங்களை ஈழத்தமிழ் மக்களும் சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜதந்திர  அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த முடியும் என்பதே தற்போது  முன்வைக்கப்பட்டுள்ள விடயமாகும். அதற்கு மகிந்தா ராஜபக்சா தனது பயணத்தை  கைவிட்டது ஒரு சிறந்த உதாரணம்.</p>
<p>மகிந்தாவின் பயணம் கைவிடப்பட்டது,  அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதாலேயே என சிறீலங்கா வெளிவிவகார  அமைச்சகம் தெரிவித்துவரும்போதும், மகிந்தவை கைது செய்வதற்கு தேவையான  போர்க்குற்ற ஆதாரங்களை பிரித்தானியா சமர்ப்பிக்க வேண்டும் என சிறீலங்கா  வெளிவிவகார அமைச்சகம் இரகசிய கோரிக்கையை விடுத்துள்ளது.</p>
<p>ஈழத்தமிழ்  மக்களைப் பொறுதவரையில் சிறீலங்கா அரசு மீது தொடர் இராஜதந்திர அழுத்தங்களை  மேற்கொள்ள வேண்டிய கடமையும், சூழ்நிலைகளும் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமே  உள்ளது. பலஸ்தீன செயற்பாட்டாளர்களை போல அனைத்துலகத்தின் நீதிக்கான  சட்டவிதிகளை ஈழத்து தமிழ் சமூகம் தெளிவாகவும், செயற்திறன் உள்ள முறையிலும்  பயன்படுத்துமாக இருந்தால், சிறீலங்கா அரச அதிகாரிகளையும், படை  அதிகாரிகளையும் சிறீலங்கா என்ற எல்லைக்குள் முடக்கிவிட முடியும்.</p>
<p>இந்த  அழுத்தங்கள், இராஜதந்திர மோதல்களை தவிர்க்கவேண்டுமானால் தமிழ் மக்களிடம்  ஒரு பேரம்பேசும் நிலைக்கு சிறீலங்கா மட்டுமல்லாது, அனைத்துலக சமூகமும்  இறங்கிவரத்தான் வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன் கூறுவது போல நாம் எப்போதும் எதிரிக்கு சனியனாகவே இருக்க  வேண்டும்.</p>
<p><strong>நன்றி: ஈழமுரசு (12/11/2010)</strong>﻿</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arushpages.wordpress.com/27/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arushpages.wordpress.com/27/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arushpages.wordpress.com/27/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=27&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arushpages.wordpress.com/2010/11/17/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a62a2c06200502a495099ccc945fe787?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">eelanaadu</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/11/mahinda.jpg?w=300" medium="image">
			<media:title type="html">mahinda</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சிங்களவர் எதிர் சிங்களவர் &#8211; இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்?</title>
		<link>http://arushpages.wordpress.com/2010/10/26/20/</link>
		<comments>http://arushpages.wordpress.com/2010/10/26/20/#comments</comments>
		<pubDate>Tue, 26 Oct 2010 06:57:07 +0000</pubDate>
		<dc:creator>eelanaadu</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arushpages.wordpress.com/?p=20</guid>
		<description><![CDATA[தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு  எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம் &#8230; <a href="http://arushpages.wordpress.com/2010/10/26/20/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=20&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://arushpages.files.wordpress.com/2010/10/16831887_7f894cb97d.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-21" title="16831887_7f894cb97d" src="http://arushpages.files.wordpress.com/2010/10/16831887_7f894cb97d.jpg?w=150&#038;h=99" alt="" width="150" height="99" /></a>தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு  எதிராக  போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது.</p>
<p><span id="more-20"></span>சிறீலங்கா அரச தலைவர்  மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக  மாறியதன் விளைவு தான் இது.</p>
<p>1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி  எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம்  சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். இந்திய இராணுவத்தின்  துணையுடன் தான் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசு அதனை நிறைவேற்றியிருந்தது.</p>
<p>அன்று  இந்தியர்களை பகைவர்களாக தமது மனதில் பதித்துக் கொண்ட சிங்கள இனம்  தற்போதும் இந்தியாவை நட்புடன் பார்ப்பது கிடையாது. அதன் பின்னர் 1987 ஆம்  ஆண்டு அதே இந்திய இராணுவம் சிறீலங்காவில் காலடியெடுத்து வைத்ததும்,  ஜே.வி.பிக்கான ஆதரவுகளை சிங்கள மக்கள் கண்மூடித்தனமாக வழங்கினர்.</p>
<p><a href="http://arushpages.files.wordpress.com/2010/10/1861982817jvp2.gif"><img class="alignleft size-medium wp-image-22" title="1861982817jvp2" src="http://arushpages.files.wordpress.com/2010/10/1861982817jvp2.gif?w=200&#038;h=300" alt="" width="200" height="300" /></a>மீண்டும்  ஜே.வி.பியின் வன்முறைகள் உச்சத்தை தொட்டது. வடக்கு – கிழக்கை இந்திய  இராணுவத்திடம் ஒப்படைத்த சிறீலங்கா அரசு, தனது உச்ச பலத்தை பயன்படுத்தி  ஜே.வி.பியை முறியடித்தது. இதன் போது 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை  செய்யப்பட்டனர்.</p>
<p>ஜே.வி.பியின் தலைவர் றோகணா விஜயவீராவும் கைது  செய்யப்பட்ட பின்னர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுடலை ஒன்றிற்கு அழைத்துச்  செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஜே.வி.பி மீண்டும் அடங்கிப்போனது.</p>
<p>எனினும்  சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் அரசியல் ஆசை பிரித்தானியாவில் அடைக்கலத்  தஞ்சம் கோரியிருந்த சோமவன்சாவை சிறீலங்காவுக்கு அழைத்துச் சென்றது.  மீண்டும் அரசியலில் ஜே.வி.பி புகுந்து கொண்டது.</p>
<p>தென்னிலங்கையில்  உள்ள அரசியல் கட்சிகளில் அரசியல் &#8211; ஆயுதப்போராட்டம் என பல முறை இரு  வழிகளிலும் பயணித்த வரலாறு ஜே.வி.பிக்கு மட்டுமே உண்டு. 1980 களின்  முற்பகுதியில் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட விஜயவீராவே பின்னர் 1988  களில் முழு வீச்சிலான ஆயுதப்போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்.</p>
<p>தற்போது  தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்  மீண்டும் ஜே.வி.பியை ஆயுதவழிக்கு இட்டுச் செல்லாம் என்ற கணிப்புக்கள்  வலுவாகி வருகின்றன.</p>
<p>ஆனால் ஜே.வி.பியில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தலைவர்களில் யார் அதனை முன்னெடுக்கப் போகின்றனர் என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வி?</p>
<p>ஆனால்  அதற்கான விடை சுலபமானது, அவ்வாறு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் வல்லமை  தற்போதுள்ள ஜே.வி.பி தலைவர்கள் யாரிடமும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்கு  மாற்றீடான வழிகளை தெரிவுசெய்ய முற்படுகின்றனர்.</p>
<p>இதனை தான் சிறீலங்கா  அரசும் தெரிவித்துள்ளது. அதாவது மாணவர் பேராட்டங்களை தென்னிலங்கையில்  தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் மூலம், மாணவர்களின் ஊடாக ஒரு  ஆயுதப்போராட்டத்தை உருவாக்க ஜே.வி.பி முயல்கின்றது என்பதே சிறீலங்கா அரசின்  குற்றச்சாட்டு.</p>
<p>அதில் உண்மையும் உள்ளது. அதாவது அண்மைக்காலமாக  தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து  வருகின்றனர். அதனால் தென்னிலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் கல்வி  நடவடிக்கையும் மெல்ல மெல்ல பாதிப்படைந்து வருகின்றது.</p>
<p>பெரதேசியா,  களனி, கொழும்பு, ஜெயவர்த்தனபுர, மொரட்டுவ, றுகுனு ஆகிய பல்கலைக்கழகங்களில்  சில பீடங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு  செல்லக் கூடாது என 176 சிங்கள மாணவர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.</p>
<p>கடந்த  14 ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 27  சிங்கள மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  அரசாங்கம் பாரிய அடக்குமுறைகளை ஆரம்பித்து, நாட்டின் பல்கலைக்கழக  கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான  கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>பல்கலைக்கழகத்துறையில் அரசியல்  சுதந்திரம் பாரியளவில் அடக்கப்பட்டு வருகிறது. விரிவுரையாளர்கள் உட்பட  பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி  வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு இருந்த சுதந்திரம்  அற்றுப் போயுள்ளதைக் காண முடிகிறது. ஸ்ரீஜயவர்தனப்புர  பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களின் சுதந்திரம்  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது  மட்டுமல்லாது, பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்துகொண்ட  ஊடகவியலாளர்கள் மீதும் சிறீலங்கா அரசு மிக மோசமாக தாக்குதலகளை நடத்தியதை  தொடர்ந்து அனைத்துலக ஊடக அமைப்புக்கள் மீண்டும் சிறீலங்காவின் வன்முறைகள்  மீது தமது கவனத்தை செலுத்தியுள்ளன.</p>
<p>தற்போது சிறீலங்கா அரச தலைவர்  மகிந்தாவின் நிம்மதியை குலைக்கும் மாணவர் அமைப்புக்களை வழிநடத்துவது யார்?  ஜே.வி.பியினால் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு  இடையிலான மாணவர் அமைப்பே  இதனை முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.</p>
<p>இந்த  அமைப்புடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் அமைப்பும் இணைந்த  செயற்பாட்டில் உள்ளது. வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த  தென்னிலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த அமைப்பில்  உறுப்பினர்களாக உள்ளனர்.</p>
<p>பெரதேனியா, களனி, சிறீஜெயவர்த்தனபுர,  றுகுனு ஆகிய பல்கலைக்கழகங்கள் அதில் முதன்மையானவை. இந்த அமைப்பை ஆரம்பித்த  சந்தா பண்டார (பெரதேனியா பல்கலைக்கழகத்தின் மாணவர்) 1988 ஆம் ஆண்டு  நடைபெற்ற ஜே.வி.பியின் ஆயுதப்போரில் முக்கிய பங்கு வகித்ததுடன், அதன்  தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டவர். எனினும் அவர் 1990 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p><strong>அடுத்த வாரம் முற்றுப்பெறும்.</strong></p>
<p><strong>நன்றி;ஈழமுரசு</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arushpages.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arushpages.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arushpages.wordpress.com/20/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=20&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arushpages.wordpress.com/2010/10/26/20/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a62a2c06200502a495099ccc945fe787?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">eelanaadu</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/10/16831887_7f894cb97d.jpg?w=150" medium="image">
			<media:title type="html">16831887_7f894cb97d</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/10/1861982817jvp2.gif?w=200" medium="image">
			<media:title type="html">1861982817jvp2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும்!</title>
		<link>http://arushpages.wordpress.com/2010/08/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/</link>
		<comments>http://arushpages.wordpress.com/2010/08/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 22 Aug 2010 19:04:19 +0000</pubDate>
		<dc:creator>eelanaadu</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arushpages.wordpress.com/?p=16</guid>
		<description><![CDATA[சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு, ஐரோப்பியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்பட்ட நாளில் சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரம்பும் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளது. சீனாவின் அரவணைப்பில் மிதக்கும் சிறீலங்கா &#8230; <a href="http://arushpages.wordpress.com/2010/08/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=16&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://arushpages.files.wordpress.com/2010/08/p14a.jpg"><img class="alignleft size-full wp-image-17" title="p14a" src="http://arushpages.files.wordpress.com/2010/08/p14a.jpg?w=640" alt=""   /></a>சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய   ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த   நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு, ஐரோப்பியத்தின்   வரிச்சலுகை நிறுத்தப்பட்ட நாளில் சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரம்பும் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளது.</p>
<p><span id="more-16"></span></p>
<p>சீனாவின் அரவணைப்பில் மிதக்கும் சிறீலங்கா மேற்குலகத்தை   சீண்டிப்பார்க்கும் நோக்கத்துடன் தான் அம்பாந்தோட்டை விழாவை ஆகஸ்ட் 15 ஆம்   நாள் ஒழுங்கு செய்திருந்தது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய   ஒன்றியம் அறியாதது அல்ல. வரிச்சலுகையின் நிறுத்தம் தொடர்பில் கொழும்பு   ஊடகம் ஒன்று மேற்கொண்ட நேர்காணலுக்கு பதில் வழங்கிய கொழும்புக்கான ஐரோப்பிய   ஒன்றிய து£துவர் பேர்னாட் சவேஜ் வழங்கிய பதில்களில் இருந்து ஐரோப்பிய   ஒன்றியத்தின் இறுக்க மான நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.</p>
<p>ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்பது 14 வறிய நாடுகளின் ஏற்றுமதிப்   பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் வரிச்சலுகையாகும்.   சிறீலங்காவை பொறுத்தவரையில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை   அனர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு இது வழங்கப்பட்டிருந்தது. தனது 7,200   பொருட்களுக்கான வரிச்சலுகையை சிறீலங்கா இதன் மூலம் பெற்றிருந்தது.</p>
<p>இந்த வரிச்சலுகைகளை வழங்குவதன் மூலம் அந்த நாடுகளில் மனித உரிமை   செயற்பாடுகளை மேம்படுத்தவும், ஒரு நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதற்குமான   பொருளாதார சூழல்களை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தியிருந்தது. அதாவது   பொருளாதார மேம்பாடுகளில் இந்த நாடுகள் தமது ஆதரவில் தங்கிநிற்கும் நிலையை   மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த வரிச்சலுகையை பெற்றுவரும்   சிறீலங்கா அரசு அதன் மூலம் வருடம் ஒன்றிற்கு 750 மில்லியன் ரூபாய்களை   சம்பாதித்தும் வருகின்றது. தற்போது இந்த வரிச்சலுகையை அது இழந்துள்ளது.   சிறீலங்கா அரசு இந்த வருமானத்தை இழந்துள்ளதுடன், தென்னிலங்கையில் பல   இலட்சம் மக்களும் தொழில்வாய்ப்புக்களை இழக்கும் நிலைக்கு   தள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>ஏறத்தாள இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், ஒரு மில்லியன்   சிங்களவர்கள் நேரிடையற்ற விதத்திலும் தொழில் பாதிப்புக்களை   சந்திக்கவுள்ளனர். சிறீலங்காவின் பொருளாதாரம் பெருமளவில் அதன்   ஏற்றுமதித்துறையில் தான் தங்கியுள்ளது. அதில் 76 சதவிகிதம் உற்பத்திப்   பொருட்களும், 23 சதவிகிதம் விவசாயப் பொருட்களும் அடங்கியுள்ளன. இந்த   உற்பத்திப் பொருட்களில் 43 விகிதம் புடவைப் பொருட்களாகும்.</p>
<p>சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களில் 60 சதவிகிதம் ஐரோப்பிய   நாடுகளுக்கே எற்றுமதி செய்யப்படுகின்றன. அது சிறீலங்காவின் மொத்த   ஏற்றுமதியில் 46 சதவிகிதமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் தமக்கு   பாதிப்புக்களை ஏற்படுத்தாது என சிறீலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநரும்,   அமைச்சர்களும் கருத்துக்களை தெரிவித்துவரும் போதும் உண்மையான நிலமை   மாறுபட்டது.<br />
சிறீலங்கா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அழுத்தம் சிறீலங்காவின் ஆடை வர்த்தக போட்டியை நெருக்கடிக்குள் தள்ளும்.</p>
<p>சிறீலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வரிகள் 9 தொடக்கம் 10   விகிதம் அதிகரிப்பதால், பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு   கொள்முதலாளர்கள் தள்ளப்படுவதால், அவர்கள் குறைந்த விலையில் கொள்வனவு   செய்யும் வேறு நாடுகளையே நாடுவார்கள். இதனைச் சிறீலங்காவின் சுதந்திர   வர்த்தக வலையத்தைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளும்   உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையானது சிறீலங்காவின் பங்குச்சந்தையை   உடனடியாகப் பாதிக்காதபோதும் அதன் கடன்சுமையை அதிகரிப்பதுடன்,   முதலீட்டாளர்களையும் விலகி ஓடச் செய்யும்.</p>
<p>ஆடை உற்பத்தியை பொறுத்தவரையில் சிறீலங்காவுக்கு போட்டியாக இந்தியா,   சீனா, தாய்லாந்து, பங்களாதேஷ் என அதன் பட்டியல் நீளம். எனவே சிறீலங்காவின்   பொருட்களின் வரிகள் அதிகரிக்கும் போது அதனை கொள்வனவு செய்யும் ஐரோப்பிய   நிறுவனங்கள் மேற்கூறப்பட்ட நாடுகளை நாடலாம்.<br />
இவ்வாறான நிலமையில்   வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களை சிறீலங்கா அரசு இழந்தால் அதனை மீண்டும்   பெறுவது மிகவும் கடினமானது. இந்த நாடுகளில் கொள்வனவு செய்து பழக்கப்பட்ட   நாடுகள் மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பப் போவதில்லை.</p>
<p>சிறீலங்காவின் இந்த நெருக்கடியான நிலமையை தணிப்பதற்கு அதன் நட்பு   நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் உதவலாம். ஆனால் ஏற்றுமதித்துறை,   தொழில்வாய்ப்புக்கள் என்பன இதில் இருந்து வேறுப்பட்டது. தமது முடிவு   பொதுமக்களை பாதிக்கும் என்றபோதும் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தின்   விதிமுறைகளில் இருந்து விலக முடியாது எனவும், அவ்வாறு விலகினால் தமது விதி   முறைகளை தாமே மீறிவிட்டதாக ஏனைய நாடுகள் குறைகூறலாம் எனவும் கொழும்புக்கான   ஐரோப்பிய ஒன்றியத்தின் து£துவர் பேர்னாட் சாவேஜ் கடந்த வருடம் ஒக்டோபர்   மாதம் தெரிவித்திருந்தார்.</p>
<p>மேற்குலகத்திற்கும் &#8211; சிறீலங்காவுக்குமான மோதல்களை வரிச்சலுகையின்   நிறுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் அதனை மேலும் அதிகரிக்க சிறீலங்கா   முற்படுவது அமெரிக்காவின் வரிச்சலுகையையும் அது எதிர்காலத்தில் இழக்கும்   நிலையை ஏற்படுத்தலாம்.<br />
அமெரிக்காவின் வரிச்சலுகையானது மனித உரிமை   மீறல்கள் மற்றும் நல்ல ஆட்சி என்பவற்றில் தங்கியிராது, தொழிலாளர்களின்   உரிமைகளில் தங்கியுள்ளபோதும் அதுவும் ஒருவகையில் மனித உரிமைகளுடன்   தொடர்புள்ளதே.</p>
<p>அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் வர்த்த குழு   அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து ஆராய்ந்து சென்றுள்ளதும்   குறிப்பிடத்தக்கது.<br />
ஆனால் மேற்குலகத்தின் இந்த அழுத்தங்களில் இருந்து   தப்பிப்பிழைத்து, தமது பொருளாதாரத்தை தக்கவைப்பதற்கு சிங்கள   புத்திஜீவிகளும், பேரினவாத ஊடகங்களும் கடும் முயற்சியை மேற்கொண்டு   வருகின்றன.</p>
<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நீக்கம் வடக்கு &#8211; கிழக்கில் உள்ள   மீனவர்களை கடுமையாக பாதிக்கும் என கடந்த மாதம் வெளிவந்த த லக்பிம வாரஏடு   தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.<br />
கடந்த 30 வருடங்களாக வடக்கு &#8211;   கிழக்கில் தமிழ் மீனவர்களை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்காது,   அவர்களின் வாழ்வை நாசமாக்கி, கடலில் கண்ட மீனவர்களை படுகொலை செய்த சிங்கள   அரசு தற்போது தனது பொருளாதார நலன்களுக்காக வடக்கு &#8211; கிழக்கு மீனவர்களை   தனக்குத் துணையாக அழைப்பது நகைப்புக்கிடமானது.</p>
<p>சிங்கள பேரினவாத ஊடகங்கள் மேற்குலகத்தை ஏமாற்ற மேற்கொள்ளும் இந்த   தந்திரமான நடவடிக்கைகளை நோக்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.   அதனைபோலவே கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் என்ற ஊடகம் கடந்த   வாரம் ஒரு காணொளி பதிவையும், பத்தி ஒன்றையும் வரைந்திருந்தது. எட்டுப்   பிள்ளைகளின் தந்தையான அஜித் பெர்ணன்டோ என்பவரின் வாழ்கையை மனதை கவரும்   வண்ணம் செய்தியாக்கி அது வெளியிட்டிருந்தது.</p>
<p>அவரின் மனைவிக்கு தற்போதும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்   பிறந்துள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நிறுத்தத்தால்   அவர் தொழிலை இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சோகத்தை   ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது.<br />
டெய்லி   மிரர் பத்திரிகையில் பணியாற்றும் சிங்கள மற்றும் அரச சார்ப்புள்ள தமிழ்   ஊடகவியலாளர்கள் இணைந்து அதனை மேற்கொண்டிருந்தனர். ஆனால் இதனை   பார்க்கும்போது தமிழ் மக்களின் மனங்களில் எழும் சில கேள்விகளும்,   கருத்துக்களும் இவை தான்.</p>
<p>அதாவது யார் இந்த அஜித் பெர்ணான்டோ?</p>
<p>போர் வெறிகொண்ட ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தின் ஒரு இனவெறியன் தான் அவன்.   வன்னியில் வீழ்ந்த ஒவ்வொரு குண்டும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்,   முதியவர்கள், நோயாளிகள் என பல அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை   பலிகொண்டபோது தென்னிலங்கை வீதிகளில் இறங்கி ஆனந்த நடனம் ஆடிய<br />
வர்களில் ஒருவனாகவே இந்த சிங்கள வெறியனை தமிழினம் பார்க்கின்றது.</p>
<p>போர்க் குற்றங்களை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை   பலிகொண்டு பல ஆயிரம் தடவை மனி உரிமை மீறல்களை மேற்கொண்ட சிங்கள   சமூகத்திற்கு கிடைத்த சிறு தண்டனை தான் இந்த வரிச்சலுகையின் நீக்கம்.   75,000 அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து, மனித உரிமை மீறல்களில் சிங்கள   பேரினவாதிகள் ஈடுபட்டபோது அதனை ஆதரித்த சிங்கள சமூகம், இந்த எதிர்வினை   தொடர்பில் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். மேலும் சிங்களவர்களின்   இனவெறி நடவடிக்கைக்கு உதவிய சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் பெர்ணான்டோ   உதவியை கேட்கலாம்.</p>
<p>மேற்குலகத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு பூரணமாக ஆதரவாக இருக்கும்   என தற்போது கூறமுடியாது. எனினும் தென்ஆசியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள   பூகோள பிராந்திய ஆதிக்க நெருக்கடிகளில் சிறீலங்காவில் உள்ள இரு இனங்களும்   தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.<br />
சிங்கள இனம் முற்று முழுதாக சீனா &#8211;   இந்தியா கூட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு உள்ள மற்றுமொரு   சமூகத்தை தனக்கு சார்பாக கொண்டுவர மேற்குலகம் முயலலாம், அல்லது அதிக   பொருளாதார அழுத்தங்கள் மூலம் சிறீலங்கா அரசை தனக்கு அடிபணிய அல்லது   ஆட்சியில் இருந்து அகற்ற அவர்கள் முயலலாம்.</p>
<p>ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த முனைவாக்கத்தை வலுவிழக்க செய்வதற்கு   சிங்கள புத்திஜீவிகளும், பேரினவாத ஊடகங்களும், சிங்கள சமூகமும்   மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடித்து அதனை மேலும் முனைவாக்கம்   பெறச்செய்யும் கடமை தமிழ் சமூகத்திற்கு உண்டு.</p>
<p>சந்தர்ப்பத்தை தவறவிடுவதும் ஒரு வகையில் நாம் சந்திக்கும் தோல்வி தான்.   எனவே சிங்கள ஊடகங்களினினதும், புத்திஜீவிகளினதும் பெய்யான பரப்புரைகளை   முறியடிப்பதற்கு வலுவான பிரச்சார மற்றும் ஊடக பலம் எமக்கு அவசியமானதுடன்,   அதனை நாம் விரைவாக மேற்கொள்ளவும் வேண்டும்.</p>
<p><strong>நன்றி: ஈழமுரசு (21.08.2010)</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arushpages.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arushpages.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arushpages.wordpress.com/16/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=16&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arushpages.wordpress.com/2010/08/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a62a2c06200502a495099ccc945fe787?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">eelanaadu</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/08/p14a.jpg" medium="image">
			<media:title type="html">p14a</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழினத்தின் கூட்டு அரசியல் தஞ்சம் கூறும் செய்தி என்ன?</title>
		<link>http://arushpages.wordpress.com/2010/08/16/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://arushpages.wordpress.com/2010/08/16/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Mon, 16 Aug 2010 21:15:56 +0000</pubDate>
		<dc:creator>eelanaadu</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arushpages.wordpress.com/?p=10</guid>
		<description><![CDATA[சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள் கூட நிறுத்துவதில்லை. விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிவருவதன் நோக்கம் வெளிப்படையானது. அதாவது புலம்பெயர் நாடுகளில் &#8230; <a href="http://arushpages.wordpress.com/2010/08/16/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=10&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://arushpages.files.wordpress.com/2010/08/canada.jpg"><img class="alignleft size-full wp-image-11" title="canada" src="http://arushpages.files.wordpress.com/2010/08/canada.jpg?w=640" alt=""   /></a>சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு  போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள  நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள்  கூட நிறுத்துவதில்லை.</p>
<p><span id="more-10"></span>விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  சிறீலங்கா அரசு தொடர்ந்து விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிவருவதன்  நோக்கம் வெளிப்படையானது. அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்  மக்களைளின் அரசியல் போராட்டங்களை முறியடிப்பது அதன் ஒரு நோக்கம்.</p>
<p><img src="http://www.sankathi.com/Picture/pic168.jpg" alt="" width="504" height="315" /></p>
<p>இரண்டாவது போரின் பின்னரும் தொடரும் சிறீலங்கா அரசின்  வன்முறைகளின் குறியீடாக தொடர்ந்து அனைத்துலகத்தின் கதவுகளை தட்டும் தமிழ்  மக்களின் அரசியல் தஞ்சம் அரசின் நயவஞ்சகத்திட்டத்தை அம்பலப்படுத்தும்  என்பதாலும் அந்த அப்பாவி மக்களை விடுதலைப்புலிகளாக்கும் பணிகளை சிறீலங்கா  அரசும் சிங்கள சமூகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.</p>
<p>கடந்த 6ம்  நாள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு &#8220;காலி  கலந்துரையாடல் 2010&#8243; என்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டை  மேற்கொண்டிருந்தது. போர் நடந்த காலப்பகுதியில் மற்றும் அதற்கு பின்னராக   சிறீலங்காவில் இருந்து தப்பி அகதிகளாக கடல்வழியாக  பல்வேறு நாடுகளை நோக்கி  தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்களை &#8220;பயங்கரவாதிகள்&#8221; என்று  சித்திரித்து தடுக்கும் திட்டத்தை தான் அந்த மாநாடு பிரதானமாக  கொண்டுள்ளது. அங்கு உரையாற்றிய சிறீலங்காவின் பாதுகாப்பு செயலளர்  கோத்தபாய உட்பட பெரும்பாலானோர் இதை மையப்படுத்தியே தமது கருத்தை  வெளியிட்டுள்ளார்கள்.அத்தோடு அமெரிக்காவின் முன்னாள் தென் மற்றம்  தென்கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ்  கலாட்ஸ்  கப்பலில் வரும் தமிழர்களை சிறீலங்காவுக்கு மீண்டும் அனுப்பப்பட  வேண்டும் என்ற ஒரு பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.</p>
<p>எனினும் அவரின் கருத்தை உடனடியாகவே வலுவாக மறுத்துள்ள  அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தை சேர்ந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின்  சிறீலங்கா விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜிம் மக்டோனால்ட், விடுதலைப்புலிகள்  அனைவரும், குற்றமிழைத்தவர்கள் அல்ல எனவும், சிறீலங்காவுக்கு அவர்கள்  மீண்டும் அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.</p>
<p>எந்த வித குற்றங்களும் சுமத்தப்படாது 11,000 ஆயிரம் தமிழ்  இளைஞர்களும், இளம் பெண்களும் சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டு  துன்புறுத்தப்படுவதையும் அவர் சுட்டடிக்காட்டத் தவறவில்லை.</p>
<p>ஆனால் சிங்கள சமூகம் தனது முயற்சிகளை தொடர்ந்த வண்ணமே உள்ளது.  தமிழர்கள் என்றால் அவர்கள்&#8221; பயங்கரவாதிகள்&#8221;தான் என்ற கருத்துபட தொடர்ந்து  பேசியும் எழுதியும் வரும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,  பேரினவாதியுமான  ரொகான் குணரத்ன இந்த கப்பலில்  உள்ளவர்கள் அனைவரும்  பயங்கரவாதிகள் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் இவர்களை நடுக்கடலில்; வைத்து  கைது செய்ய வேண்டும் என்றும் இந்த மாதிரியானவர்களுக்கு எதிராக ஒரு  முன்னுதாரணமாக கடும் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டும் என்றும்  சம்பந்தப்பட்டவர்களால் மேற்கு நாடுகளுக்கு ஆபத்து என்றும் அண்மைய நேர்காணல்  ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p>
<p><img src="http://www.sankathi.com/Picture/pic167.jpg" alt="" width="504" height="325" /></p>
<p>றொஹான் குணரத்தினாவை பொறுத்தவரையில் அவர் சிறீலங்கா அரசினதும்,  சிங்கள சமூகத்தினதும் தனி மனித இராணுவம்(One man army) அவரால்  ஈழத்தமிழர்களின் உரிமை போர் சந்தித்த பின்னடைவுகள் ஏராளம் என்பதுடன், இந்த  மனிதாபிமானமற்ற பேரினவாதியினால் தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளில்  சந்தித்த துன்பங்களும் அதிகம்.</p>
<p>சிங்கப்பூரை தளமாக கொண்ட நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்  அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பீடத்தின் தலைவராக  பணியாற்றிவரும்(u;ead of RSIS’s International Centre for Political  Violence and Terrorism Research (ICPVTR) Nanyang Technological  University) குணரத்தினா தான் ஒரு பேராசிரியர் என்ற தொழில் தர்மத்தை  கூடமறந்து, சிறீலங்கா அரசின் கூலிப்படையாக தனது பேரினவாதத்தை  கக்கிவருகிறார்.</p>
<p>இவரின் கருத்துக்களை நாம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின்  கருத்துக்களாகவே எதிர்காலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன், இது  தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், சிங்கப்பூர் அரச தலைவருக்கும்  முறைப்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்பது புலம்பெயர்  தமிழ் சமுகத்தின் ஒருமித்த கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது.</p>
<p>மேலும் அரசியல் வன்முறைகள் தொடர்பான பீடத்தின் தலைவாரக  பணியாற்றும் குணரத்தினா சிறீலங்கா அரசின் அரசியல் வன்முறை தொடர்பில்  எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒரு இனத்தின் சிறு குழந்தை தொடக்கம்  வயதானவர்கள் வரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்துவரும் இவரின் நடவடிக்கைகளை  நாம் புறக்கணிக்க முடியாது.</p>
<p>இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா  அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் வன்முறைகளுக்கான முக்கியமான பங்கை  குணரத்தினா என்பவன் வழங்கப்போகின்றான். காலணித்துவ சிந்தனைக்குள் மூழ்கி  ஒரு சிறிய இனத்தின் அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியா  ஊடகங்கக்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த போரில் அவர் பெற்ற வெற்றி எமக்கு  ஒரு முன் உதாரணம்.</p>
<p><img src="http://www.sankathi.com/Picture/pic166.jpg" alt="" width="446" height="297" /></p>
<p>புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக நாடுகளில் வாழ்கிறோம்,  எம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசோ அல்லது அதன்  ஊதுகுழலான குணரத்தினாவோ சுமத்த முடியாது. மேலும் புலம்பெயர் நாடுகளில்  அரசியல் தஞ்சம்கோரும் மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.</p>
<p>சிறீலங்கா அரசை போல அனைத்துலக நாடுகளும் நடந்துகொள்ள முடியாது.  சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ்  மக்கள் மீதான அடக்குமுறைகளும், புறக்கணிப்புக்களும் நின்றுவிடவில்லை.  தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றாக இல்லாது செய்த அவசரகாலச்சட்டமும்  சிறீலங்காவில் நீக்கப்படவில்லை.</p>
<p>மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட சிறீலங்கா அரசின் உக்கிர இன  அழிப்பில் இருந்து தப்பிக்க தமிழ் மக்கள் உலக நாடுகளில் தொடர்ந்து அரசியல்  தஞ்சம் கோரி வந்துள்ளனர். ஆனால் தற்போது போர் நிறைவுபெற்றுள்ளதாக  சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் முன்னரை விட அதிகளவில்  கூட்டம் கூட்டமாக அரசியல் தஞ்சம் கோருவது பல தகவல்களை இந்த உலகிற்கு  தெரிவித்துவருகின்றது.</p>
<p><img src="http://www.sankathi.com/Picture/pic165.jpg" alt="" width="504" height="392" /></p>
<p>•	ஈழத் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலை என்பது போரின் போது  மட்டும் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவில்லை, அமைதியான  காலப்பகுதியிலும் அது முன்னெடுக்கப்படுகின்றது.</p>
<p>•	போரை சிறீலங்கா அரசு முடிவுக்கு கொண்டுவந்தது ஒரு இன  அழிப்பின் மூலம் தான். எனவே தற்போது அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு உள்ள  அடையாளம் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் என்பதே.</p>
<p>•	ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு  முன்வைக்கப்பட்டு, அவர்களின் இன, காலாச்சார, பூகோள விழுமியங்கள்  அழிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.</p>
<p>•	வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரும் இந்த மக்கள் போரில் கோரமாக  தோற்கடிக்கப்பட்டு, இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற தமது அடையாளங்கள்  பறிக்கப்பட்டவர்கள்.</p>
<p>•	இறைமை என்ற பெயரில் அழிவுக்கு உள்ளாகிய ஒரு சிறிய இனத்தில் எஞ்சியவர்கள் தான் இந்த அகதிகள்.</p>
<p>இதனை தான் தமது உயிர்களை பணயம் வைத்து பல மாதங்கள் கப்பலில் பயணம்  செய்யும் இந்த மக்கள் உலகிற்கு அறிவிக்கின்றனர். இந்த கூட்டு அரசியல்  தஞ்சம் என்பதும் ஒருவகையில் எமது அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவம் தான்.</p>
<p>இனவாத சிங்கள அரசினாலும், மனிதாபிமானமற்ற பிராந்திய நாடுகளினாலும்  அழிவுக்குள்ளான ஒரு இனம் உலகில் சிறிதளவு மனிதாபிமானமும், மனித உரிமைகளும்  வாழும் நாடுகளின் வாசல் கதவுகளை தட்டுகின்றனர்.</p>
<p>ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு, அவர்கள்  தமது தாயகத்தில் சிறிலங்கா அரசினதும், படைகளினதும் தலையீடுகள் இன்றி  சுதந்திரமாக வாழும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தி கொடுக்கும் வரை  அவர்களின் வாசல் கதவுகளை ஈழத்தமிழ் சமூகம் அகதிகளாக தட்டிக்கொண்டே  இருக்கும்.</p>
<p>ஒரு சிறிய இனம் மீதான போரில் ஒன்றிணைந்த உலக நாடுகள் தற்போது  அவர்களின் அரசியல் உரிமைக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில்  ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. அதனை தான் ஒரு இனப்படுகொலையில்  இருந்து தப்பிய இந்த சிறிய இனத்தின் மக்கள் உலகிற்கு உணர்த்தி  நிற்கின்றனர்.</p>
<p>﻿</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arushpages.wordpress.com/10/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arushpages.wordpress.com/10/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arushpages.wordpress.com/10/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=10&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arushpages.wordpress.com/2010/08/16/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a62a2c06200502a495099ccc945fe787?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">eelanaadu</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/08/canada.jpg" medium="image">
			<media:title type="html">canada</media:title>
		</media:content>

		<media:content url="http://www.sankathi.com/Picture/pic168.jpg" medium="image" />

		<media:content url="http://www.sankathi.com/Picture/pic167.jpg" medium="image" />

		<media:content url="http://www.sankathi.com/Picture/pic166.jpg" medium="image" />

		<media:content url="http://www.sankathi.com/Picture/pic165.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தென்னாசியாவில் நேரடியான தலையீடுகளை மேற்கோள்ளத் தயாராகின்றதா அமெரிக்கா?</title>
		<link>http://arushpages.wordpress.com/2010/08/08/hello-world/</link>
		<comments>http://arushpages.wordpress.com/2010/08/08/hello-world/#comments</comments>
		<pubDate>Sun, 08 Aug 2010 22:11:09 +0000</pubDate>
		<dc:creator>eelanaadu</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://arushpages.wordpress.com/?p=1</guid>
		<description><![CDATA[ஸ்ரீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும், அமைதிப் பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதைத் தொடர்ந்து, தென் ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆளுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா நேரடியாகத் தனது கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஆரம்பம் வன்னியில் நடைபெற்ற போர் கடந்த வருடம் மே மாதம் நிறைவுபெற்றதும் &#8230; <a href="http://arushpages.wordpress.com/2010/08/08/hello-world/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=1&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><!--end: postmeta--><a href="http://arushpages.files.wordpress.com/2010/08/57872.jpg"><img class="alignleft size-medium wp-image-8" title="5787" src="http://arushpages.files.wordpress.com/2010/08/57872.jpg?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>ஸ்ரீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும், அமைதிப்  பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தைத்  தக்கவைக்கும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதைத் தொடர்ந்து, தென் ஆசியப்  பிராந்தியத்தில் தனது ஆளுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா  நேரடியாகத் தனது கையில் எடுத்துள்ளது.</p>
<p><span id="more-1"></span></p>
<p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஆரம்பம் வன்னியில் நடைபெற்ற போர்  கடந்த வருடம் மே மாதம் நிறைவுபெற்றதும் ஆரம்பமாகிவிட்டது. அதுவரை  ஸ்ரீலங்காவுக்கான தூதுவராகப் பணியாற்றிய றொபேட் ஓ பிளேக் உடனடியாக  இடமாற்றப்பட்டு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளியுறவு  செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பில்  மாற்றமடைந்துவரும் பூகோள அரசியலில் இந்தப் பதவி காத்திரமான பங்கை வகிக்க  வல்லது. அது மட்டுமல்லாது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆளுமையை  பேணுவதற்காக 60 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின்  பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடமும் தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளது.</p>
<p>கடந்த மாதம் இந்தக் கட்டளைப் பீடத்தை சேர்ந்த பேர்ள் ஹாபர் தரையிறங்கு  கலம் திருமலை துறைமுகத்திற்கு வந்து சென்ற நிலையில், அடுத்த வாரம் பசுபிக்  பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த 40 படை அதிகாரிகளைக் கொண்ட குழு  ஸ்ரீலங்கா வரவுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. பசுபிக்  ஏஞ்சல்  2010 மனிதாபிமான நடவடிக்கை என இதற்கு பெயரிடப்பட்டி ருந்தாலும்  அமெரிக்காவின் ஆளுமையை தென் ஆசியாவில் அதிகப்படுத்தும் முயற்சியாகவே இது  பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் படைக் கட்டமைப்பில் பசுபிக் பிராந்திய  கட்டளைப் பீடம் மிக முக்கியமானது.</p>
<p>அது ஏறத்தாழ 325,000 படையினரை (அமெரிக்க படை பலத்தில் இது 20 விகிதம்)  கொண்டதுடன், முதன்மையான 5 விமானம் தாங்கி கப்பல்களையும் கொண்டுள்ளது.இந்தக்  கட்டளை மையத்தின் கீழ் நான்கு படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்  கடற்படை 5 விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளதுடன், 180  கப்பல்களையும், கப்பல்களில் தரித்து நிற்கும் 1,500 தாக்குதல்  விமானங்களையும், 100,000 கடற்படையினரையும் கொண்டது. இராணுவத்தைப்  பொறுத்தவரையில் 60,000 இலகு காலாட் படையினர் அங்கு நிறுத்தப்பட்டு  ள்ளபோதும், அவர்களில் வான்நகர்வு படையினரே அதிகம். மேலும் 85,000 ஈரு  டகப்படையினரும் (அமெரிக்கவின் ஈருடக படைக் கட்டமைப்பில் இது 65 விகிதம்),  1200 சிறப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் 400 தாக்குதல் விமானங்களுடன், 40,000 வான்படையினரும், 27,000  கரையோர காவல் படையினரும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புலனாய்வுத்துறை  அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40,000 பேரும் பசுபிக் பிராந்திய  கட்டளைப் பீடத்தில் உள்ளடங்கியுள்ளனர். அதாவது அமெரிக்காவின் பசுபிக்  பிராந்திய கட்டளை பீடம் என்பது உலக நாடுகளுடன் தனியாகப் போர் புரியும்  வல்லமையையும் அதற்கேற்ற ஆளணிகள் மற்றும் தளபாடங்களையும் கொண்டுள்ளதை  மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும். அமெரிக்க  அரசைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பசுபிக் பிராந்திய  கட்டளைப் பீடத்தை வடிவமைத்து பேணிவருவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.</p>
<p>அதாவது இந்தக் கட்டளை பீடத்தின் ஆளுமைக்குள் பூமிப்பந்தின் அரைப் பங்கு  நிலம் உள்ளதுடன், 3.4 பில்லியன் மக்களும் வாழ்கின்றனர். உலகில் அதிக  எண்ணிக்கையான இராணுவங்களை கொண்டுள்ள நாடுகளும் இந்த பீடத்தின்  கட்டமைப்புக்குள் தான் அடங்குகின்றன. ஹவாய்த் தீவைத் தலைமையகமாகக் கொண்ட  பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட மிகவும்  சிக்கலான பூகோள, கலாசார மற்றும் இன விழுமியங்களை உடைய 36 நாடுகளை கொண்ட  இந்தப் பிரதேசத்தை அமெரிக்கா நான்கு வலயங்களாகப் பிரித்து கண்காணித்து  வருகின்றது. வட கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, தென் ஆசியா, ஓசெனிகா என  அவை பிரிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நான்கு பிராந்தியங்களிலும் தென்ஆசியா பிராந்தியம் தற்போது அதி  முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றம் பெற்றுள்ளது. சீனா, இந்தியா ஆகிய  நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சீனாவின் படை பல அதிகரிப்புக்கள் என்பன  அதற்குப் பிரதானமான காரணங்களாகும். ஸ்ரீலங்காவில் நடைபெற்ற அமைதிப்  பேச்சுக்கள் வரை இந்தியாவுடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்புக்கள் மூலம் தென்  ஆசியா பிராந்தியத்தில் தனது ஆளுமையைத் தக்கவைக்கலாம் என அமெரிக்கா  நம்பியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இன் கொள்கைகளும் இந்தியாவை  இந்த பிராந்தியத்தில் முதன்மைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.</p>
<p>ஆனால் 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது  இந்தியா அதனை கையாண்ட முறை, வன்னியில் நேரிடையாக ஒரு தரையிறக்கத்தை  மேற்கொள்ள முயன்ற பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த ஈரூடகப்படை  யினரை தடுத்து நிறுத்திய இந்தியாவின் முயற்சிகள் என்பன அமெரிக்காவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவதானிகள் தெரிவித்திருந்தனர்.</p>
<p>இந்த நிகழ்வுகளுடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் அதிக  மாற்றங்களை அவதானிக்க முடிந்துள்ளது. றிச்சர்ட் பௌச்சர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டு றொபேட் ஓ பிளேக் அதில் அமர்த்தப்பட்ட துடன், பசுபிக்  பிராந்திய கட்டளை பீடமும் தனது செயற்திறனை அதிகரித்துக் கொண்டது.அண்மையில்  கொரிய வளைகுடாவின் கிழக்கு கடற்பகுதியில் நடைபெற்ற அமெரிக்க  தென்கொரிய  கடற்படை ஒத்திகையை சீனாவும் வடகொரியாவும் கடுமையாக எதிர்த்தபோதும், பசுபிக்  கட்டளை பீடம் அதனை கடும்போக்குடன் கையாண்டு கொண்டது. சீனாவுக்கு அண்மையான  கடற்பகுதி என்பதால் சீனாவும், தென்கொரியா தனது எதிரி என்பதால் வடகொரியாவும்  அதனை எதிர்த்திருந்தன.</p>
<p>இந்தக் கடல் ஒத்திகை நடத்தப்பட்டால் அதனை தன் மீதான போராகவே வடகொரியா  பார்க்கும் எனவும், பதில் தாக்குதலும் நடத்தப்படும் எனவும் வடகொரியா  எச்சரித்திருந்தது. வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து போர்  ஒத்திகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அமெரிக்க கடற்படையின் மிகவும்  சக்தி வாய்ந்த கப்பலிகளில் ஒன்றான ஜோர்ஜ் வோஷிங்டன் பசுபிக் கட்டளை  பீடத்தில் இருந்து இந்த கடல் ஒத்திகையில் இணைந்து கொண்டது. 70 அதி நவீன  போர் விமானங்களுடன் வந்த வோஷிங்டன் வடகொரியாவின் வாயை மூடிவிட்டது. முன்னரை  போலல்லாது ஆசிய பிராந்தியத்தில் விட்டுக்கொடுப் புக்களை மேற்கொள்ள  அமெரிக்கா தற்போது விரும்புவதில்லை.</p>
<p>விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது ஸ்ரீலங்காவின் மூன்றில் இரண்டு  கடற்பகுதிகளை அமெரிக்கா சுலபமாக தனது வசப்படுத்தும் நிலையில்  இருந்ததாகவும், அது தவறிப்போனது அமெரிக்காவுக்கு பலத்த ஏமாற்றம் எனவும்  ஐரோப்பாவைச் சேர்ந்த படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால்  இந்த ஏமாற்றங்களைக் கருத்தில் எடுத்துள்ள அமெரிக்கா, தனது வெளியுறவுக்  கொள்கைகள் மற்றும் போர் உத்திகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ் தான்  அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த அது முற்பட்டு  வருகின்றது.விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கையாண்ட உத்திகளை விட,  ஆப்கானிஸ் தான் விடயத்தில் பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் உத்திகள் திறமை  வாய்ந்தனவாக அமெரிக்கா கருதுகின்றது.</p>
<p>மேலும் தென் ஆசிய பிராந்திய நெருக்கடிகளை நேரடியாக கையாண்டு, அதன் மூலம்  தனது ஆளு மையை அங்கு நேரிடையாக செலுத்தவும் அமெரிக்க முயன்று  வருகின்றது.மாலைதீவு போன்ற சிறிய நாடுகளின் விவகாரத்தை இந்தியா நேரிடையாகக்  கையாள்வதை முன்னர் அனுமதித்து வந்த அமெரிக்கா அண்மையில் அங்கு ஏற்பட்ட  அரசியல் நெருக்கடிகளில் நேரிடையாக தலையிட்டிருந்தது ஒரு முக்கிய மாற்றம்  எனக் கருதப்படுகின்றது. மாலைதீவு  ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் துதுவர்  அதனைக் கையாண்டிருந்தார். அமெரிக்காவின் இந்த உத்தி மாற்றங்களை இந்தியாவும்  உணர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் பர்மாவின் இராணுவ ஆட்சியாளரை அது  அரவணைத்து கொண்டுள்ளது.</p>
<p>எல்லா அண்டைய நாடுகளிலும் பேரம் பேசும் வல்லமையை இந்தியா  இழந்துள்ளதாகவும், இது இந்தியாவுக்குக் கிடைத்த துரதிர்ஷ்டம் எனவும் இந்திய  ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். ஆனால் ஆப்கான் விடயத்தில்  பாகிஸ்தான் தனது பேரம்பேசும் வல்லமையைத் தக்கவைத்துள்ளதாக அவர்கள்  தெரிவிக்கின்றனர்.ஸ்ரீலங்காவில் பேரம்பேசும் அழுத்தத்தை இழந்துள்ள இந்தியா  பர்மாவின் மூலம் அதனை தக்கவைக்குமா என்பது கேள்விக்குறியானது. ஆனால்  இந்தியாவின் அரவணைப்பின் மூலம் பர்மா தனது கறைகளைக் கழுவிவிட முடியும்.</p>
<p>இருந்தபோதும், தென்ஆசிய பிராந்தியத் தில் இந்தியாவை ஓரம்கட்டி அமெரிக்கா  நேரிடையாக நுழைந்து கொள்வது அந்த பிராந்தியத்தின் உறுதித் தன்மையையும்,  மனித உரிமைகளையும் மேம்படுத்த உதவும் என்றே கருதப்படுகின்றது. மேலும்  பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தின் இந்த நகர்வைத் தடுக்கும் படை வல்லமை  அந்தக் கட்டமைப்பின் நடவ டிக்கை எல்லை பிராந்தியத்தின் கீழ் உள்ள  டக்கப்படும் 36 நாடுகளிலும் இல்லை என்பதே உண்மை.</p>
<p><strong>நன்றி: வீரகேசரி</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/arushpages.wordpress.com/1/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/arushpages.wordpress.com/1/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/arushpages.wordpress.com/1/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=arushpages.wordpress.com&amp;blog=15102783&amp;post=1&amp;subd=arushpages&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://arushpages.wordpress.com/2010/08/08/hello-world/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a62a2c06200502a495099ccc945fe787?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">eelanaadu</media:title>
		</media:content>

		<media:content url="http://arushpages.files.wordpress.com/2010/08/57872.jpg?w=300" medium="image">
			<media:title type="html">5787</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
